Wednesday, April 17, 2013

தினம் ஒரு இயற்கை தரும் அன்பளிப்பு

எதிர்பார்ப்பு 

நேற்று அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன். என் கணவர் கூப்பிட்டார், "இங்கே வந்து பாரேன், யார் வந்திருக்காங்கன்னு..." எங்கள் வீட்டு ஜன்னலுக்கு பக்கத்தில் உள்ள வாழை மரத்தில் ஒன்று, அதற்க்கு பக்கத்தில் மற்றறொரு வாழை மரத்தில் இன்னொன்றுமாக ஒரு ஜோடி பறவைகள். இதற்கு முன்பாக அப்படி ஒரு பறவையை பார்த்ததே கிடையாது. தலையிலிருந்து உடல் மர  நிறம். தோகையோ சந்தன நிறம். அவ்வளவு அழகு. உண்மையான பெயர் தெரியாததாலும், ஜோடியாக வந்ததாலும் அவகளுக்கு ஜோடிக்குயில் னு பெயர் வைத்து பிரம்மித்துக்கொண்டிருந்தோம். படம் பிடிக்கணும்னு தோணவே இல்லை. எங்களிடம் புகைப்படக்கருவியும் இல்லை.  உணவு இடைவேளை சமயம் வேகமாக வீட்டிற்கு வந்து வலையை தேடி தேடி பார்த்தாலும் அந்த பறவையை ஒத்த ஒன்றை பார்க்கவே முடியவில்லை. இன்றாவது அவைகள் வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காலையையும் எதிர்நோக்குகிறோம். 

பூரிப்பு 

இன்று பார்த்தால் இயற்கை எங்களுக்கு எதிர்பாராத சந்தோசத்தை கொடுத்தது. வாசலில் உள்ள மூன்று மலர்கள் பூத்திருந்தன முதல்முறையாக. முதலில் நான் பார்த்தது வெள்ளை அரளி பூ, பக்கத்திலே ஒரு சிகப்பு ஒற்றை செம்பருத்திப்பூ அடியிலே ஒரு மஞ்சள் ஜினியா பூ. எனக்கா ஒரே பூரிப்பு.....

Wednesday, April 10, 2013

உயிர் வேலியாய் எங்கள் வீட்டை காக்கும் குருவிகள்

எங்கள் வீட்டில் சுற்றிலும் காய்கறிகள் பயிரிட்டிருப்பதால் தினமும் செடி செடியாய் ரசித்து அனுபவிப்பது பழக்கமாகிவிட்டது. தினமும் தண்ணீர் விட்ட பின்பும் தோட்டத்தை விட மனசே வராது. அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டும், மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே என்ன செய்வது என்று சொல்லி கொண்டு தான் தினமும் வீட்டுக்குள் நுழைவேன். இன்றும் அதேபோல் தான் வர மனசே இல்ல, வீட்டு நிலைக்குள் நுழையும் பொது குருவிகள் கூச்சல் அதிகமாக இருந்தது. பக்கத்தில் போய் பார்க்க ஆசை, போனால் தொந்தரவாக இருக்குமே என்று மாடி படிகளுக்கு சென்று எட்டி பார்த்தேன். நிறைய தவிட்டுக்குருவிகள் போட்டி போட்டுக்கொண்டு கொத்திக்கொத்தி சாப்பிட்டுகொண்டிருந்தன. உற்று பார்த்த பொழுது தான் தெரிந்தது, அவை கம்பளி பூச்சிகளை பொருக்கி பசியாறிக்கொன்டிருந்தன. எனக்கு ஒரே ஆச்சர்யம்... எப்படி எங்கள் குடும்பத்தை குருவிகள் காப்பாற்றுகின்றன!!! 

இயற்கை விவசாயம் சின்ன அளவில் செய்ததற்கே இத்தனை நன்மைகள் என்றால் நம் வாழ்கை முழுவதும் இயற்கையாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனநிறைவோடு உள்ளே வந்தேன்.